search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் கவர்னர்"

    மேற்கு வங்காள மாநில முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்திக்கு ‘ராஜீவ் காந்தி சத்பவனா’ விருதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழங்கினார். #GopalkrishnaGandhi #RajivSadbhavnaAward
    புதுடெல்லி:

    அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆற்றிய பணியை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ‘ராஜீவ் காந்தி சத்பவனா’ விருது வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2016-2017-ம் ஆண்டுக்கான இவ்விருதுக்கு மேற்கு வங்காள மாநில முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி, நேற்று டெல்லி ஜவகர் பவனில் இவ்விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விருது கமிட்டியின் தலைவர் கரன்சிங் ஆகியோர் கோபாலகிருஷ்ண காந்திக்கு விருது வழங்கினர்.

    இது, பாராட்டு பத்திரமும், ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசும் கொண்டது ஆகும். #GopalkrishnaGandhi #RajivSadbhavnaAward  #tamilnews 
    வாராக் கடன்களை கட்டுப்படுத்துவது பற்றி குழுவின் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜனுக்கு நாடாளுமன்ற குழு அழைப்பு விடுத்துள்ளது. #RahuramRajan #ParliamentaryPanel
    புதுடெல்லி:

    நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க முடியாமல் வங்கிகள் கடுமையாக திணறி வருகின்றன.

    இந்த நிலையில் மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், பா.ஜனதா தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீடுகள் குழுவில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் வாராக் கடன்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டது பற்றி எடுத்துக் கூறி இருந்தார். மேலும் அவரை அழைத்து இதுபற்றி ஆலோசனைகளை கேட்டுப் பெற வேண்டும் என்றும் அரவிந்த் சுப்பிரமணியம் வலியுறுத்தி இருந்தார்.

    இதையடுத்து முரளி மனோகர் ஜோஷி, தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகர வர்த்தக பள்ளியில் பேராசிரியராக பணியாற்றி வரும் ரகுராம் ராஜனை நாடாளுமன்ற மதிப்பீடுகள் குழு கூட்டத்தில் பங்கேற்று வாராக் கடன்களை கட்டுப்படுத்துவது பற்றி குழுவின் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கும்படி கடிதம் எழுதி உள்ளார். #RahuramRajan #ParliamentaryPanel
    ×